மன்னார் கடற்கரையில் கனிய மணல் அகழ்வுக்கு முயற்சித்தவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு

Mannar Sri Lankan Peoples Crime
By Ashik May 19, 2025 05:38 PM GMT
Report

மன்னார் - பேசாலை 50 வீட்டு திட்ட கடற்கரையோர பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணியில், கனிய மணல் அகழ்வுக்கான நில அளவை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 

இன்றைய தினம் (19.05.2025) மதியம் கனிய மணல் அகழ்வுக்கான நில அளவை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலையீட்டினால் குறித்த நடவடிக்கை கைவிடப்பட்ட நிலையில், நில அளவைக்கு என கொழும்பு தலைமையகத்தில் இருந்து வருகை தந்தவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.

மன்னார் பிரதேச செயலாளரினால் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியும், நீரியல் வளத்துறை திணைக்களத்தின் அனுமதியும் பெற்றுக் கொண்டு நில அளவை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும், அதற்கு மாறாக அவர்கள் மன்னாரில் இருக்கும் நில அளவை திணைக்களத்திற்கு மாறாக கொழும்பு தலைமையகத்தில் உள்ள நில அளவை திணைக்களத்தில் இருந்து ட்ரோன் மூலம் இப்பிரதேசத்தை அளப்பதற்கு குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு இந்தியா அனுப்பிய இரகசிய தகவல் அம்பலம்!

பாகிஸ்தானுக்கு இந்தியா அனுப்பிய இரகசிய தகவல் அம்பலம்!

நில அளவை 

இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில், பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார், கடற்றொழில் அமைப்பு, பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர்.

மன்னார் கடற்கரையில் கனிய மணல் அகழ்வுக்கு முயற்சித்தவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு | Attempts To Mine Mineral Sand On Mannar Coast

குறித்த நில அளவை திணைக்களத்தினர் மாஸ் மினரல் நிறுவனத்தினால் அழைத்து வரப்பட்ட நிலையில் அவர்கள் இங்கு வந்து நில அளவையை மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுத்ததாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார் தெரிவித்தார்.

உரிய முறையில் எவ்வித அனுமதியும் பெற்றுக் கொள்ளாமல் குறித்த பகுதிக்கு வருகை தந்து ரோன் கேமரா மூலம் நில அளவையை மேற்கொள்ள நடவடிக்கைகளை குறித்த குழுவினர் முன்னெடுத்தனர்.

கனடா பிரித்தானியாவின் புதிய கூட்டு நகர்வு: ஈழத்தமிழர்களின் முதுகில் குத்திய அமெரிக்கா

கனடா பிரித்தானியாவின் புதிய கூட்டு நகர்வு: ஈழத்தமிழர்களின் முதுகில் குத்திய அமெரிக்கா

அனுமதி 

இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குறித்த விடயம் தொடர்பாக இம்மாத இறுதியில் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும், அதன் பின்னர் இவ்விடயம் குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னர் குறித்த நடவடிக்கையை தொடர்வதா? இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மன்னார் கடற்கரையில் கனிய மணல் அகழ்வுக்கு முயற்சித்தவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு | Attempts To Mine Mineral Sand On Mannar Coast

மேலும், கொழும்பில் இருந்து வருகை தந்த நில அளவை திணைக்களத்தினர் குறித்த நடவடிக்கையை கைவிட்டுச் சென்றுள்ளனர். அதேவேளை குறித்த பகுதிக்குச் சென்ற மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுடன் குறித்த குழுவினர் முரண்பாட்டில் ஈடுபட்டதாக கூற்படுகின்றது.

அதேவேளை, எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நில அளவைக்கான அனுமதியை வழங்கப் போவதில்லை. இத்திட்டம் நடைமுறைப்படுத்தபடக் கூடாது.

இதனால் மன்னார் தீவு முழுமையாக பாதிக்கப்படும். எனவே கரையோர மணல் அகழ்வுக்கு மன்னார் மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டார்கள் என பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். 

யாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் பொறுப்பற்ற செயல்: நோய் பரவும் அபாயம்

யாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் பொறுப்பற்ற செயல்: நோய் பரவும் அபாயம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US