யாழில் சாட்சிக்கு வந்தவரை வாளால் வெட்ட முயற்சித்த நபர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஒன்றுக்கு சாட்சிக்காக வந்த நபரை வாளால் வெட்ட முயற்சித்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வாள்வெட்டு வழக்கு ஒன்றின் சாட்சிக்காக கடந்த 30ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு வந்த நபரை, நீதிமன்றத்துக்கு முன்னால் வைத்து வாளால் வெட்டி தாக்க முற்பட்ட மூவரில் இருவர் அன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தலைமறைவாகி இருந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திறந்த பிடியாணை
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் - ஆரியகுளத்தக்கு அருகாமையில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவருக்கு வாள்வெட்டு தொடர்பாக மூன்று திறந்த பிடியாணை உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
