மக்களையும் இராணுவத்தையும் இணைத்துச் செயற்பட வைக்கும் நடைமுறைக்கு நான் எதிரானவன்: செய்திகளின் தொகுப்பு
இராணுவத்தினரைத் தமிழ் மக்களுடன் இணைத்து பலவித செயற்பாடுகளில் ஈடுபட வைப்பதற்கு இந்த அரசாங்கம் விரும்புகின்றது என முன்னாள் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சங்கானை பிரதேச செயலகத்தில் நேற்று (26) சமூக மட்ட அமைப்புகளுக்கு உதவிகள் வழங்கி வைத்த பின்னரே செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்களையும் இராணுவத்தையும் இணைத்துச் செயற்பட வைப்பதற்கு மற்றையவர்களது நிலைப்பாடு என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் நான் அதற்கு எதிரானவன் என கூறினார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,