ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் துறைக்கு மாற்ற முயற்சி! - சிங்கள ஊடகம் தகவல்
ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் துறைக்கு மாற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்போது ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது, அவற்றில் தரைவழிச் செயல்பாடுகள் மற்றும் சரக்குப் பிரிவு ஆண்டுக்கு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுகிறது.
இந்நிலையில், விமானக் குத்தகைக் கொடுப்பனவுகள், எரிபொருள் செலவுகள் மற்றும் இதர செலவுகள் அதிகரிப்பதால் சேவை நஷ்டமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு விமானத்திற்கு மாதத்திற்கு சுமார் 5-8 லட்சம் அமெரிக்க டொலர்கள் குத்தகை செலுத்த வேண்டும் என்பதுடன், மொத்த செலவில் 25 வீதம் எரிபொருளுக்காகச் செலுத்த வேண்டியுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நஷ்டம் நாட்டுக்கு பாரிய சுமையாக மாறியுள்ள நிலையில், குறிப்பிட்ட பங்குகளை தக்கவைத்து எஞ்சிய பங்குகளை தனியாருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக எதிர்வரும் 9ம் திகதிக்குள் முடிவு எடுக்கப்பட உள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
