வடக்கில் வருமானம் குறைந்த மாணவர்களின் அடைவு மட்டத்தில் வீழ்ச்சி
வடக்கில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களின் அடைவுமட்டங்கள் மிகவும் குறைவாக இருப்பதாக வடமாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் நேற்று (06.02.2024) இடம்பெற்றுள்ளது.
மீளாய்வு கூட்டம்
இதன்போது வன்னி மாவட்டங்களின் கல்வி நிலமை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், அதில் ஏற்ப்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் 2018 தொடக்கம் 2022 வரை க.பொ.த.சாதாரண மற்றும் உயர்தரபரீட்சைகளில் வடக்கு மாகாண மாணவர்களின் சித்தி விகிதங்கள் ஒப்பீடு செய்யப்பட்டதுடன், மாணவர்களின் அடைவு மட்டங்களை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் கருத்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை வருமானம் குறைந்த மாணவர்களின் அடைவு மட்டங்களே மிகவும் குறைவாக காணப்படுகின்றது.
எனவே, அவர்களை இனம்கண்டு அந்த மாணவர்களின் அடைவு மட்டங்களை அதிகரிக்க வேண்டிய தேவை தொடர்பாக அறிவுறுத்தல்கள் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் கிராமிய இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், வடக்கு மாகாண ஆளுனர் எஸ்.எம்.சாள்ஸ், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிறஞ்சன், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் காயத்திரி அபேகுணசேகர, மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 7 மணி நேரம் முன்

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan
