தாயின் கைகளை கட்டிவிட்டு 27 வயது மகள் கடத்தல்
காலி - உடுகம பகுதியில் 27 வயது பெண்ணொருவரை கடத்திச்சென்று தகாதமுறைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உடுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதான சந்தேகநபர் மேலும் மூவருடன் சேர்ந்து பெண்ணின் வீட்டிற்கு வந்து தாயின் கைகளை கட்டிவிட்டு வாகனத்தில் அவரை கடத்திச்சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பெண்ணை கடத்திச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் செல்லகதிர்காமம் பகுதியில் வீடொன்றில் பெண்ணுடன் இருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் வெளியான தகவல்
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 58 வயதுடைய தொடருந்து ஓட்டுநர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சந்தேகநபருடன் வந்த ஏனைய மூன்று சந்தேகநபர்களும் காலி, குருந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கடத்தப்பட்ட பெண் ஒரு குழந்தையின் தாய் எனவும் அவரது கணவர் அவரை விட்டு பிரிந்து வாழ்கின்றமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

வெறித்தனமான போஸ்டர்.. வெற்றிமாறன் - சிம்பு படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
