யாழில் கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்: பொலிஸாரிடம் வசமாக சிக்கிய நபர்
யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அறிந்த நிலையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த தாக்குதலை நடத்திய கொட்டடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மது போதையில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதலின் பின்னணி தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.