யாழில் வீடொன்றின் மீது தாக்குதல்
யாழில் மர்ம நபர்களால் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுதுமலை தெற்கு, இரும்புக்காரன் வீதியில் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.
குறித்த தாக்குதலானது மேற்குறிப்பிட்ட பகுதியைச் சேர்நத சிவானந்தன் சஜிரதன் என்பவர் மீது நடாத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (27) அதிகாலை 02.30 மணியளவில் இரண்டு மோட்டார்
சைக்கிள்களில் வந்த நால்வர், அவரது வீட்டுக்குள் உள்நுழைந்து இவ்வாறு
தாக்குதல் நடாத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்கள் என முதற்கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri