பர்கினா பசோவில் மர்ம நபர்கள் தாக்குதல்: 50 பேர் பலி-செய்திகளின் தொகுப்பு
பர்கினா பசோவில் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பர்கினா பசோ நாட்டில் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்துவதும், மக்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்து கொள்வதும் வழக்கம்.
இந்நிலையில், அந்நாட்டின் கிழக்கே மத்ஜோவாரி பகுதியில் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சிலர் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 50 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர்.
பலர் காயமடைந்து உள்ளனர். இதனை கிழக்கு பகுதி கவர்னர் ஹூபர்ட் யமியோகோ செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,