கிளப் வசந்தவின் மனைவியிடம் இருந்த துப்பாக்கி! பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள தகவல்கள்
அத்துருகிரிய பிரதேசத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் போது உயிரிழந்த கிளப் வசந்த என்ற செல்வந்தரின் மனைவி வைத்திருந்த துப்பாக்கி சட்டவிரோதமானது என்று பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்(Deshabandu Tennakoon) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் காலை, அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சைக்குத்தும் நிலையம் ஒன்றில் வைத்து கிளப் வசந்த உள்ளிட்டவர்கள் மீது சிலரால் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடாத்தப்பட்டது.
சட்டவிரோத துப்பாக்கி
இதன்போது, கிளப் வசந்த உள்ளிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்தனர்.
இதன்போது, சம்பவ இடத்தில் KPI என்ற எழுத்துப் பொறிக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன. அத்தோடு, கிளப் வசந்த மற்றும் அவரது மனைவி ஆகியோரிடம் இருந்த ஒரு துப்பாக்கியும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டது.

இந்தநிலையில், குறித்த துப்பாக்கி சட்டவிரோதமானது என்று பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று அறிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் மறைந்திருக்க முடியாது எனவும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் டிரான் அலஸ்(Tiran Alles) குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்செயல் வெளிநாட்டில் இருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டரை மாதங்களாக திட்டமிட்டு பிறகு இவ்வாறு ஒரு சம்பவம் நடத்தப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் டிரான் அலஸ் மேலும் சுட்டிக்காட்டினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam