இரட்டைக்கொலை சம்பவம்: சந்தேகநபர்கள் தொடர்பான புதிய தகவல்
அத்துருகிரியவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பின்னர் கொலையாளிகள் தப்பிச்சென்ற பேருந்து கதிர்காமம் பிரதேசத்தில் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் (06) ஆம் திகதி தெற்கு அதிவேக வீதியில் வைத்து கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரையும் அம்பலாங்கொட பிரதேசத்தில் இருந்து அத்துருகிரிய பகுதிக்கு அழைத்துச்செல்ல பயன்படுத்திய வான் தொடர்பான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.

பேருந்து பயணித்த சிசிடிவி காட்சிகள்
இந்நிலையில் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட நேர விசாரணையில் தப்பிச்செல்ல பயன்படுத்திய பேருந்து கதிர்காமம் பகுதியில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களும் பேருந்தும் மேலதிக விசாரணைகளுக்காக அத்துரிகிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், கொலை இடம்பெற்ற பின்ன் பேருந்து பயணித்த சிசிடிவி காட்சிகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
|
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan