இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் - பெரும் கவலையில் மகிந்த குடும்பம்
நாட்டின் பாதுகாப்பிற்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நேற்றைய தினம் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
சுற்றுலாப்பயணிகளை பாதுகாக்க நடவடிக்கை
ஜனாதிபதி செயலகம், சர்வதேச புலனாய்வு பிரிவுகள், அமைப்புக்கள் என்பனவற்றுடனும் முப்படையினர் மற்றும் பொலிஸாருடனும் இணைந்து பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri
உன்னை கொன்றுவிடுவேன்... கடும் கோபத்தில் சரவணன்.. வெளிவந்த உண்மை! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ வீடியோ Cineulagam