கோவிட் ஆபத்து குறித்து எச்சரிக்கும் விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம்
பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலைமையில் மக்கள் சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைவாக நடந்துக்கொள்ளாத காரணத்தினால், நாட்டில் மீண்டும் கோவிட் தொற்று பரவலாம் என விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம் எச்சரித்துள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், மக்கள் அடிப்படை சுகாதார சட்டங்களை மீறி, பாதுகாப்பற்ற வகையில் செயற்பட்டு வருகின்றனர்.
இதனால், பச்சை நிற வலயங்களாக இருக்கும் நாட்டின் பகுதிகள் சிகப்பு நிற வலயங்களாக மீண்டும் மாறும் ஆபத்து இருப்பதாக சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது அதிகரித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் இப்படியான நிலைமை ஏற்பட்ட பெருந்தொகையான அந்நிய செலாவணியை இழக்க நேரிடும் எனவும் பயணக்கட்டுப்பாட்டு சட்டங்கள் தேவைக்கு அதிகமாக தளர்த்தப்படுவது சிறந்த நிலைமையல்ல எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.