கல்வியியற் கல்லூரிகளை திறக்குமாறு பணிப்பு
கல்வியியற் கல்லூரிகளை நாளை 15ம் திகதி முதல் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கோவிட் தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள், தனிமைப்படுத்தல் மற்றும் கோவிட் சிகிச்சை மையங்களாகப் பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாளை மீண்டும் திறக்கப்படும் மேற்படி கல்லூரிகளின் கல்வி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை (18) ஆரம்பிக்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதேவேளை, பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசியரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை,குறித்த கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.





ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

படம் இல்லை ரூ. 100 கோடிக்கு மேலான செலவில் அட்லீ இயக்கும் விளம்பரம்... பிரம்மாண்டத்தின் உச்சம் Cineulagam
