பெண்கள் மீது கொடூர தாக்குதல்: நீதிமன்றம் வழங்கியுள்ள கடுமையான உத்தரவு
சீனாவில் உணவகம் ஒன்றில் பெண்கள் தாக்கப்பட்டது தொடர்பில் முக்கிய குற்றவாளிக்கு 24 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென் ஜிஸி என்ற நபர், தலைநகர் பீஜிங்கிற்கு கிழக்கே டாங்ஷான் வட்டாரத்தில் உள்ள ஓர் உணவகத்தில் பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார்.
அதற்கு அந்த பெண்கள் மறுப்பு தெரிவித்தபோது குறித்த நபரும் அவரின் நண்பர்களும் அந்த பெண்களை நாற்காலிகள், போத்தல்கள் ஆகியவற்றைக் கொண்டு தாக்கியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
இதனை தொடர்ந்து பொலிஸாரால் குறித்த நபரும் அவரின் நண்பர்களும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது முக்கிய குற்றவாளிக்கு 24 ஆண்டு சிறைத்தண்டனை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலும் 27 பேருக்கு 6 மாதங்கள் முதல் 11 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குண்டர் கும்பல் கலாசாரம்
பெண்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட சென் என்ற நபர், பொதுமக்களை அச்சுறுத்திய குண்டர் கும்பல் ஒன்றின் தலைவர் என்றும் அவர் 2012ஆம் ஆண்டிலிருந்து குற்றங்கள் புரிந்திருப்பதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதலை, குண்டர் கும்பல் தொடர்பான குற்றம் என பொலிஸ் அதிகாரிகள் கூறினாலும், பலரும் அது நாட்டில் மேலோங்கி இருக்கும் பாலியல் வன்முறையைக் குறிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri
