இலங்கையில் கண்காணிப்புக்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிய வலையமைப்பு உறுப்பினர்கள்
சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு (ANFREL) நேற்று (11) முதல் இலங்கை முழுவதும் குறுகிய கால கண்காணிப்பாளர்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.
நாட்டில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை அவதானிப்பதற்கு முன்னதாக பதின்மூன்று நீண்ட கால கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
தேர்தல் முறை மற்றும் அரசியல் நிலப்பரப்பு
அவர்களுக்கு உதவுவதற்காகவே தற்போது குறுகிய கால கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்தமாக சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு சார்பில் மொத்தமாக 30 கண்காணிப்பாளர்கள் களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
களத்துக்கு அனுப்பப்படுவதற்கு முன்னதாக, கண்காணிப்பாளர்கள் இலங்கையின் தேர்தல் முறை மற்றும் அரசியல் நிலப்பரப்பு பற்றி கொழும்பில் ஒரு நாள் விளக்கமளிப்பில் பங்கேற்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri