தேசபந்து தென்னகோனின் நியமனம் தொடர்பில் நீதிமன்றம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை(Deshabandu Tennakoon) நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிலைப்பாட்டை அறிய கால அவகாசம் வழங்குமாறு மேலதிக மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தென்னக்கோனின் பொலிஸ் மா அதிபர் பதவி ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாகவே இலங்கையில் தற்போது பதில் பொலிஸ் மா அதிபர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
தென்னக்கோனின் பதவி
இந்தநிலையில், தென்னக்கோனின் பதவியை எதிர்த்து கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் கர்தினால் ரஞ்சித் உள்ளிட்ட 8 தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றபோது போதே, சட்டமா அதிபரின் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நாடாளுமன்ற சபாநாயகர், அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்கள், தேசபந்து தென்னகோன் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் அடுத்தகட்ட விசாரணையை 2025 பெப்ரவரி 24 மற்றும் 25ம் திகதிகளுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது .
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri