சிவில் செயற்பாட்டாளர் அசேல சம்பத் கைது
சிவில் செயற்பாட்டாளர் அசேல சம்பத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அசேல சம்பத், பொதுமக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் அழைப்பாளராகத் திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அசேல சம்பத்தின் முகநூல் பக்கத்தில் அவரது கைது தொடர்பில் காணொளியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் சதொச நிறுவனத்தினால் விநியோகம் செய்யப்படும் நிவாரணப்பொதி குறித்து பிழையான தகவல்களை வெளியிட்டதாகத் தெரிவித்து அசேல சம்பத் மீது அமைச்சர் பந்துல குணவர்தன முறைப்பாடு செய்திருந்தார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் அசேல சம்பத்தை காவல்துறையினர் இன்று கொழும்பு கோட்டையில் வைத்து கைது செய்துள்ளனர்.
எனினும், அசேல சம்பத் கைது செய்யப்பட்டமை குறித்து காவல்துறையினர் உறுதி செய்த போதிலும் அவரது கைதிற்கான காரணங்களை இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam