பொது மக்களின் மரணத்திற்குப் பின்னரே நிவாரணம் கிடைக்கும்! அசேல சம்பத்
அரசாங்கம் பொதுமக்களுக்கு உறுதியளித்த அத்தியாவசியப் பொருட்களுக்கான நிவாரணம், பொது மக்களின் மரணத்திற்குப் பின்னரே கிடைக்கும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் வைத்து நேற்று (20.09.2022) அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களுக்கான நிவாரணம்
அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் உயிருடன் இருக்கும் போது அத்தியாவசியப் பொருட்களுக்கான நிவாரணம் கிடைக்காது.

அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் காரணமாகவே இந்த நாடு பரிதாபகரமான நிலைக்கு சென்றுள்ளது.
நிவாரணம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
விரைவில் அரசாங்கத்தை கலைத்து ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட தலைவர்களை நியமித்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் எதிர்கட்சி தலைவரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
தற்போதுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நீக்கி விட்டு, நாட்டின்
மீது பற்று கொண்ட ஜனநாயகத்தை மதிக்கும் புதியவர்கள் பதவி ஏற்று,
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam