விடுதலை புலிகள் தொடர்பில் பொய்யான புனைக் கதைகள்: அருண் சித்தார்த் விரட்டியடிப்பு
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகளால் சித்திரவதைக்கு உள்ளாகி புதைக்கப்பட்ட 4000 பேரின் உடல்கள் இருப்பதாக கூறி குறித்த பகுதிக்கு விஜயம் செய்த அருண் சித்தார்த், பொதுமக்களால் பகிரங்கமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
யாழ். சிவில் சமூகம் என்ற பெயரில் பதியப்படாத அமைப்பை அருண் சித்தார்த் இயக்கிவருவதாகவும், தமிழ் தேசியத்துக்கு எதிராக செயற்பாடுகளை அவர் முன்னெடுப்பதாகவும் தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இவ்வாறான ஒரு நோக்கத்தில் செம்மணி புதைக்குழி விவகாரத்தை திசை திருப்ப போலியான குற்றச்சாட்டோடு துணுக்காய் பகுதிக்கு சென்ற அவர் தற்போது பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.
சுயலாப நோக்கத்துக்கான செயற்பாடு
இவ்வாறு சித்திரவதைக்குள்ளானவர்களின் உடற்கூறுகள் அங்கு காணப்படுவதாகவும், அதனை துப்பரவு செய்ய வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
எனினும், அவ்வாறு சென்ற அருண் சித்தார்த்தை பிரதேச மக்கள் “ இங்கு 4000 சடலங்கள் காணப்படுவதாக இருந்தால், முதலில் கிராம சேவகருக்கு அறிவித்து, பொலிஸ் முறைப்பாட்டை பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
மேலும், நீதிமன்றம் ஊடகவே இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு தன்னிச்சையாக செயற்படுவது சுயலாப நோக்கத்துக்கான செயற்பாடு என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த ராசியில் பிறந்தவங்க இறக்கும் வரை பணக்காரர்களாக இருப்பார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

இந்த வாரம் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் ஸ்பெஷல் கெஸ்ட்.. குடும்பத்துடன் வந்த பிரபலம், வீடியோ Cineulagam
