கடந்த 5 மாதங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 31 பேர் கைது
கடந்த 5 மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் 31 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கும் மே மாதம் 31 ஆம் திகதிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 8 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒரு பொலிஸ் ஆய்வாளர், ஒரு துணை ஆய்வாளர், 4 சார்ஜென்ட்கள் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊழல் விசாரணை ஆணைக்குழு
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு அதிபர் மற்றும் இரண்டு பொது சுகாதார ஆய்வாளர்களும் அடங்குவர் என இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று மதியம் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் இலங்கை விமான நிறுவனத் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.