புலனாய்வு தகவலை அடுத்து விரைவாக எடுக்கப்பட்ட நடவடிக்கை! பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு
இலங்கை பிரஜைகள் அனைவரது பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் புத்தளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
புலனாய்வு தகவல்
மேலும், பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் பொறுப்பு. பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவிக்கப்படும் பகுதிகளின் பாதுகாப்பை விரைவாக உறுதிசெய்ய நாங்கள் செயற்பட்டோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் விரைவாகச் செயல்பட்டு, சந்தேகத்திற்குரிய சிலரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இலங்கையில் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பையும் நாங்கள் தற்போது உறுதி செய்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam