50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிய பயணம்.. பகிரப்பட்ட அற்புதமான தருணம்!
சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதகுலம் மீண்டும் நிலவை நோக்கித் தனது காலடியை எடுத்து வைத்துள்ளது.
நாசாவின் ஆர்டெமிஸ் II (Artemis II) விண்கலத்தில் பயணிக்கும் நான்கு விண்வெளி வீரர்கள், பூமியின் சுற்றுவட்டப்பாதையைத் தாண்டி நிலவை நோக்கிய தமது பயணத்தை உத்தியோகபூர்வமாகத் தொடங்கியுள்ளனர்.
நேற்று ஏவப்பட்ட இந்த விண்கலம், 25 மணிநேரம் பூமியைச் சுற்றி வந்த பிறகு, 'டிரான்ஸ்லூனர் இக்னிஷன்' (translunar ignition) எனப்படும் உந்துதல் மூலம் நிலவை நோக்கிய பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.
இறுதிக்கட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர்! குறிவைக்கப்பட்ட ஈரானின் எஞ்சிய பகுதி - தொடரும் அமெரிக்காவின் எச்சரிக்கை
பூமியின் சுற்றுவட்டப்பாதை
இந்நிலையில், "1972இல் அப்பல்லோ 17 திட்டத்திற்குப் பிறகு, முதன்முறையாக மனிதர்கள் பூமியின் சுற்றுவட்டப்பாதையை விட்டு வெளியேறியுள்ளனர் என்பதைத் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்" என நாசாவின் லோரி கிளேஸ் (Lori Glaze) உற்சாகத்துடன் அறிவித்துள்ளார்.
“I’m the space plumber, I’m proud to call myself the space plumber.”
— NASA (@NASA) April 3, 2026
Mission specialists like @Astro_Christina train for all roles so they can jump in wherever they’re needed. Sometimes that means fixing vital machinery, like the spacecraft toilet. pic.twitter.com/RGBWkwRgX7
இந்த பயணத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்,
விக்டர் குளோவர் (நிலவை நோக்கிப் பயணிக்கும் முதல் கறுப்பினத்தவர்)
கிறிஸ்டினா கோச் (நிலவை நோக்கிய பயணத்தில் பங்கேற்கும் முதல் பெண் விண்வெளி வீரர்)
ஜெர்மி ஹான்சன் (நிலவுக்குச் செல்லும் முதல் அமெரிக்கர் அல்லாதவர் (கனடா))
ரீட் வைஸ்மேன் (விண்கலத்தின் தளபதி)
உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை! இலங்கையின் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்புகளில் சிக்கல்
அரிய காட்சி
நிலவை நோக்கிப் பயணிப்பதற்கு முன்னதாக, விண்கலத்தின் உயிர் காக்கும் அமைப்புகள் (Life-support systems) மற்றும் கழிப்பறை வசதிகள் ஆகியவற்றை வீரர்கள் பரிசோதித்தனர்.

கழிப்பறையில் ஏற்பட்ட சிறு கோளாறைச் சரிசெய்த விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச், தன்னை ஒரு "விண்வெளி பிளம்பர்" என வேடிக்கையாக அழைத்துக் கொண்டார்.
பூமியை விட்டுத் தள்ளிச் செல்லும்போது விண்கலத்தின் ஜன்னல் வழியாகத் தெரிந்த காட்சியைக் கண்டு வீரர்கள் வியந்துள்ளனர்.
"நாங்கள் அனைவரும் ஒரே இனம் (Homo sapiens), எங்கிருந்து வந்தோம் என்பது முக்கியமல்ல, நாம் அனைவரும் ஒன்றே" என விண்வெளி வீரர் விக்டர் குளோவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இது 10 நாட்கள் நீடிக்கும் ஒரு பரீட்சார்த்தப் பயணமாகும். நிலவில் தரையிறங்காமல், அதன் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி நிலவைச் சுற்றி வந்து மீண்டும் பூமிக்குத் திரும்புவதே (Free-return trajectory) இந்தத் திட்டத்தின் நோக்கம்.
இது 2028இல் நிலவில் மனிதர்களைத் தரையிறக்கும் திட்டத்திற்கு முன்னோடியாகும்.
சீனா 2030க்குள் நிலவில் மனிதர்களைத் தரையிறக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த 'ஆர்டெமிஸ் II' பயணம் விண்வெளி ஆய்வில் ஒரு பெரும் மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam