தமிழர் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றதா..! சாணக்கியன் கேள்வி

Shanakiyan Rasamanickam Sri Lanka Tourism Eastern Province Northern Province of Sri Lanka
By Rukshy Jun 19, 2024 03:54 AM GMT
Report

வடக்கு கிழக்கை பொறுத்த வரையில் சுற்றுலாப்பயணிகளின் வருகை மிக குறைவாக உள்ளதோடு இது திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan) கேள்வியெழுப்பியுள்ளார்.

இதனை நேற்று (18.06.2024) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே வினவியுள்ளார்.

இலங்கையில் வாக்காளர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தினால் அதிகரிப்பு

இலங்கையில் வாக்காளர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தினால் அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகள்

மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கினை பொறுத்த வரையில் இன்று சுற்றுலாப்பயணிகளின் வருகை மிக குறைவாக உள்ளது.

கிழக்கு மாகாணத்தின் அறுகம்பே பிரதேசத்தில் அரசாங்கத்தின் எந்த முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத போதும், சுற்றுலாப் பயணிகள் வருகை அங்கு அதிகமாகக் காணப்படுகின்றது. ஏனெனில் நீர் விளையாட்டிற்குரிய (Surfing) கடல்வளம் காணப்படுவதாலாகும்.

/arrival-tourists-planned-neglected-tamil-areas

இந்நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போக்குவரத்து இன்று பிரதானமான பிரச்சினையாக உள்ளது. யாழ்ப்பாணத்தினை பொறுத்த வரையில் பலாலி விமான நிலையம் ஊடாக சில சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் சூழல் உள்ளது.

இதேவேளை மட்டக்களப்பில் உள்ள விமான நிலையம் கடந்த காலத்தில் இயங்கு நிலையில் இருந்தாலும் தற்போது மாவட்டத்தினுள் விமானங்கள் தரையிறங்குவதில்லை. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைவாக உள்ளது.

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு

நிதி மோசடி

இதற்கிடையில் மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் போன்ற கரையோர பிரதேசங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையானதொரு சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான முன்மொழிவுகளை நாங்கள் வழங்கியுள்ளோம். இன்று வரை அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

/arrival-tourists-planned-neglected-tamil-areas

இந்த சூழ்நிலையில், இன்று பரவலாக பேசப்படும் விடயம் யாதெனில் VFS என்ற தனியார் நிறுவனம் சுற்றுலாப் பயணிகளுடன் தொடர்பான நிதி மோசடியினை மேற்கொள்கின்றது.

இதற்கு பின்புலக் காரணிகளாக அமைச்சர்கள் இருக்கக் கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. எவராக இருந்தாலும் இலங்கைக்குள் வருவதற்கு விசா (Visa) விண்ணப்பத்திற்கு கட்டணம் செலுத்தினால் VFS என்ற நிறுவனத்தினால் அரசாங்கத்திற்கும் அந்தப் பணம் இல்லாமலாக்கப்படுகின்றது.

இதற்கிடையில், பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பிற்கு புகையிரதம் வருவதற்கு 2 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் எடுத்த முயற்சியினால் விசேட எக்ஸ்பிரஸ் தொடருந்து (Express Train) மட்டக்களப்பிற்கு வருகின்றது.

வர்த்தகர்களுக்கு வரிச் சலுகை வழங்கும் அரசாங்கம்! சஜித் குற்றச்சாட்டு

வர்த்தகர்களுக்கு வரிச் சலுகை வழங்கும் அரசாங்கம்! சஜித் குற்றச்சாட்டு

தமிழ் மக்கள்

இந்த சூழ்நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் 20ம் திகதி இலங்கை வரவிருப்பதை செய்திகள் மூலம் அறிய முடிகின்றது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலத் தொடர்பினை ஏற்படுத்துவது, புகையிரத சேவையினை ஆரம்பிப்பது மிக முக்கிய விடயமாக உள்ளது.

/arrival-tourists-planned-neglected-tamil-areas

ஏனெனில் தென்னிந்தியாவில் உள்ள எங்களது தமிழ் சகோதர மக்களில் குறிப்பிட்ட தொகையினர் இலங்கைக்கு வந்தால் வடக்கு, கிழக்கினை எம்மால் கட்டியெழுப்ப முடியும். ஆகவே அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், ஜனாதிபதிக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்க வேண்டுமாயின் அவர் தமிழ் மக்களுக்கு கூறும் சில விடயங்களையாவது செய்ய வேண்டும்.

இவற்றினை மேற்கொள்ளாது செயற்படுவதனால் தமிழ் மக்களை ஏமாற்றுவதனையே தனது நோக்கமாக கொண்டுள்ளார் என்பதை நாங்கள் எண்ண முடியும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலட்சக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு! அதிர்ச்சித் தகவல்

இலட்சக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு! அதிர்ச்சித் தகவல்

பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கவில்லை : நீதியமைச்சர்

பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கவில்லை : நீதியமைச்சர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US