கொழும்பில் பணத்திற்காக பிள்ளையை கடத்திய பெண் திடீரென உயிரிழப்பு
நீர்கொழும்பில் போதைப்பொருள் கொடுக்கல் வாங்கல் காரணமாக 10 வயது சிறுவனை கடத்திச்சென்ற பெண் திடீரென சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன் கெகுனாவல தெரிவித்துள்ளார்.
சேதுவத்தை - வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த 47 வயதுடைய சமிலா உதயங்கனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணிடமிருந்து ஹெரோயினை பெற்றுக்கொண்ட நபர் அதற்கான பணத்தை முழுமையாக செலுத்தாமையால், அவரின் 10 வயதான பேரனை கடத்திச் சென்று,கிராண்ட்பாஸ் ரந்திய உயன பகுதியிலுள்ள வீடமைப்பு தொகுதியில் தடுத்து வைத்திருந்த நிலையில் கடந்த 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து கொழும்பு சிறைச்சாலை பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுகவீனமடைந்த சந்தேகநபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| கொழும்பில் பணத்திற்காக பிள்ளையை கடத்திய பெண்ணால் பரபரப்பு |
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam