நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்களுக்கு விளக்கமறியல்
யாழ்.நெடுந்தீவு கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று(29.10.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 14 இந்திய கடற்தொழிலாளர்களே இவ்வாறு யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவிற்கு பாதுகாப்பாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள்! நிதர்சனத்தை அம்பலப்படுத்திய சிறீதரன் (Video)
விளக்கமறியல்
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் நீரியல்வள திணைக்களத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam