கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கடற்படை புலனாய்வு அதிகாரிகள் கைது (Video)
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கடற்படை புலனாய்வு அதிகாரிகள் இரண்டு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் இன்று காலை புத்தளம் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
புத்தளம், போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் புத்தளம் - குருநாகல் வீதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீவிரமடையும் விசாரணைகள்

மோட்டார் சைக்கிள் ஒன்றில் எடுத்துச்செல்லப்பட்ட சிறிய பை ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 650 கிராம் கஞ்சா அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
புத்தளம் தம்பபண்ணி கடற்படை முகாமின் புலனாய்வு அதிகாரிகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு கஞ்சாவை விநியோகித்தவர்கள் மற்றும் யாரிடம் அதனைக் கையளிக்க எடுத்துப் போனார்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam