கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த குழுவினர் கைது
கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த வடக்கு கிழக்கை சேர்ந்த 10 பேர் சிலாபம், இரணைமடு கடல் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை கடற்படையினரால் குறித்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும். இந்த நபர்கள் கப்பல் ஊடாக அவுஸ்திரேலியா நோக்கி செல்ல திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதென கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நபர்கள் மேலதிக விசாரணைக்காக சிலாபம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.