ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்
அந்த வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர் கவலை வெளியிட்டுள்ளார்.
ஜோசப் ஸ்டாலின் போன்ற மனித உரிமை பாதுகாவலர்களின் பணி சமீபத்திய வாரங்களில் முன்னெப்போதையும் விட முக்கியமானது என்று லாலர் ஒரு ட்வீட்டில் கூறியுள்ளார்.
மனித உரிமை பாதுகாவலர்களின் முயற்சிகள்
மனித உரிமை பாதுகாவலர்களின் முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் தண்டிக்கப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஸ்டாலின் நேற்று மாலை தமது தொழிற்சங்க தலைமை அலுவலகத்தில் இருந்து கைது செய்யப்பட்டார்.
கடந்த மே மாதம் 28ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் போது ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறியதாக தெரிவித்தே காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
இதேவேளை,புதிய ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சிம்மாசன உரையை ஆற்றி ஜனநாயகத்தை கொண்டு
வருவோம் என உறுதியளித்த அதே நாளில் உயர் தொழிற்சங்க தலைவர் கைது செய்யப்பட்டமை
ஜனநாயகத்திற்கு கடுமையான அவமானம் என நாட்டின் இடதுசாரி கட்சியொன்று கண்டனம்
தெரிவித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற மனைவி தீபிகாவுக்கு தினேஷ் கார்த்திக் தந்த முதல் ரியாக்ஷன்! புகைப்படம் News Lankasri

ஒவ்வொரு ஆணும் கட்டாயம் 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும்! மீறினால் சிறை... அதிரடி உத்தரவை போட்ட நாடு News Lankasri

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri
