ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்
அந்த வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர் கவலை வெளியிட்டுள்ளார்.
ஜோசப் ஸ்டாலின் போன்ற மனித உரிமை பாதுகாவலர்களின் பணி சமீபத்திய வாரங்களில் முன்னெப்போதையும் விட முக்கியமானது என்று லாலர் ஒரு ட்வீட்டில் கூறியுள்ளார்.
மனித உரிமை பாதுகாவலர்களின் முயற்சிகள்
மனித உரிமை பாதுகாவலர்களின் முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் தண்டிக்கப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஸ்டாலின் நேற்று மாலை தமது தொழிற்சங்க தலைமை அலுவலகத்தில் இருந்து கைது செய்யப்பட்டார்.
கடந்த மே மாதம் 28ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் போது ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறியதாக தெரிவித்தே காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
இதேவேளை,புதிய ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சிம்மாசன உரையை ஆற்றி ஜனநாயகத்தை கொண்டு
வருவோம் என உறுதியளித்த அதே நாளில் உயர் தொழிற்சங்க தலைவர் கைது செய்யப்பட்டமை
ஜனநாயகத்திற்கு கடுமையான அவமானம் என நாட்டின் இடதுசாரி கட்சியொன்று கண்டனம்
தெரிவித்துள்ளது.





பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
