தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அவசர தீர்மானத்தின் பின்னணி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பொதுமன்னிப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து வருடக்கணக்கில் கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த நாடாளுமன்ற அமர்வுகளின் போது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச சபையில் யோசனை ஒன்றினை முன்வைத்திருந்தார்.
இந்த யோசனைக்கு ஆளும் எதிர்க்கட்சிகள் சகலரும் தமது ஆதரவை வழங்கியிருந்ததோடு, சில விமர்சனங்களும் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் பேரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 16 பேருக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளது.
அவர்களில் 15 சிறைக்கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்தும் மற்றுமொருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்தும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலையாகியுள்ளனர்.
மயில்வாகனம் மதியழகன், 30.05.2007 கைது செய்யப்பட்டதோடு, 14.11.2017 ஆறு வருட சிறைத்ததண்டனை விதிக்கப்பட்டது.
சிமியோன் சாந்தியோகு 20.07.2011 கைது செய்யப்பட்டதோடு 06.11.2017 ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ராகவன் சுரேன் திகதி 24.07.2011 கைது செய்யப்பட்டதோடு, 06.12.2017 ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எம்.எம். அப்துல் சலீம் 13.12.2011 கைது செய்யப்பட்டதோடு, 06.12.2017 ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சந்தன் ஸ்ராலின் ரமேஸ் 23.01.2012 கைது செய்யப்பட்டதோடு, 06.12.2017 ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நடராஜா சரவணபவன் 26.08.2009 கைது செய்யப்பட்டதோடு, 06.12.2017 ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இராசதுரை ஜெகன் 17.05.2009 கைது செய்யப்பட்டதோடு, 10.01.2019 ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நல்லான் சிவலிங்கம் 05.10.2009 கைது செய்யப்பட்டதோடு, 10.01.2019 ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
புருஷோத்தமன் அரவிந்தன் 21.07.2009 கைது செய்யப்பட்டதோடு, 16.01.2019 ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இராசபல்லவன் தபோரூபன் 28.06.2009 கைது செய்யப்பட்டதோடு 16.01.2019 ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சூர்யகுமார் ஜெயச்சந்திரன் 25.09.2010 கைது செய்யப்பட்டதோடு, 22.01.2019 ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிவப்பிரகாசன் சிவசீலன் 26.08.2009 கைது செய்யப்பட்டதோடு, 22.01.2019 ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எட்வட் ஜுலியன் 31.04.2016 கைது செய்யப்பட்டதோடு, 20.09.2014 மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
விஸ்வநாதன் ரமேஸ் 09.08.2008 கைது செய்யப்பட்டதோடு, 10.08.2016 பதினேழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சூரியமூர்த்தி ஜீவோகன் 18.05.2009 கைது செய்யப்பட்டதோடு, 19.10.2016 பதினான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிறில் இராசமணி 11.12.2012 கைது செய்யப்பட்டதோடு, 06.12.2017 ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இளைஞர் விவகார அமைச்சர் நாமல்
ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேகநபர்களின் விடுதலை குறித்து
கருத்து வெளியிட்டார்.