கொத்துக் கொத்தாக சரணடையும் இராணுவ வீரர்கள்: திகைக்க வைக்கும் உக்ரைன் - செய்திகளின் தொகுப்பு
உக்ரைன் - ரஷ்யப் போர் 7வது நாளை எட்டியுள்ள நிலையில், மனக்குழப்பமடைந்துள்ள ரஷ்யத் துருப்புகள் உக்ரைனில் கூட்டமாகச் சரணடைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் ரஷ்யத் துருப்புகள் மனக்குழப்பத்திலும் சோர்வடைந்தும் காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல ரஷ்ய இராணுவத்தினருக்கு தாங்கள் உக்ரைனில் போருக்கு அனுப்பப்பட்டுள்ளோமா என்பதும் தெரியவில்லை என கூறப்படுகிறது. மட்டுமின்றி, உக்ரைனில் புகுந்துள்ள ரஷ்ய வீரர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் எரிபொருளும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,