யாழில் 25 ஏக்கர் காணி இராணுவத்தினரால் சுவீகரிப்பு - உறுதிப்படுத்திய அதிகாரிகள்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கை நாளை (09.07.2026) முன்னெடுக்கப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
காணி சுவீகரிப்பு
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் அமைந்துள்ள சுமார் 25 ஏக்கருக்கும் அதிகமான காணி, இராணுவத் தேவைக்காக சுவீகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தை தொடர்புகொண்டு வினவியபோது, அங்குள்ள அதிகாரிகள் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், சுவீகரிக்கப்படவுள்ள காணி அவசியத் தேவைக்காக கையகப்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடும் அறிவித்தல் குறித்த பகுதியில் ஒட்டப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுரேஷ் சலேவிடமிருந்து 600 பக்க இரகசிய அறிக்கை..! வெளிச்சத்துக்கு வந்துள்ள வெளிவராத பல இரகசிய தகவல்கள்