பிலிப்பைன்சில் உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கி 2 இராணுவ வீரர்கள் பலி
பிலிப்பைன்சின் காவிட் மாகாணத்தில் உள்ள கடற்படை தளத்தில் ஏற்பட்ட இராணுவ உலங்கு வானூர்தி (Helicopter) விபத்தில் 2 இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு உடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சாங்கி விமான நிலையத்தில் இருந்து இராணுவ பயிற்சிகளுக்காக கடற்படை தளத்துக்கு புறப்பட்ட உலங்கு வானூர்தி (Helicopter) ஒன்றே விமானியின் கட்டுப்பாட்டை இழந்ததுள்ளது.
இராணுவ பயிற்சிகள்
இதன்போது நிலைதடுமாறி கேவிட் சிட்டியில் உள்ள ஒரு சந்தைப்பகுதி அருகே உலங்கு வானூர்தி (Helicopter) விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் 2 இராணுவ வீரர்கள பலியாகிதையடுத்து இராணுவ பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |