கொழும்பு உள்ளிட்ட முக்கிய நான்கு மாவட்ட மக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவித்தல்
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் 20 முதல் 29 அகவைக்குட்பட்டோருக்கான தடுப்பூசி வழங்கல் நாளை முதல் ஆரம்பமாகும் என்று கோவிட் தொற்றுநோய் தடுப்பு தேசிய இயக்க மையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா இன்று தெரிவித்துள்ளார்.
இந்த மாவட்டங்களில் 20 அகவைக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தற்போது செயல்படும் அதே தடுப்பூசி மையங்களில் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய தடுப்பூசி மையங்கள் தவிர, கொழும்பு மாவட்டத்தில் உள்ள விஹாரமஹாதேவி பூங்கா, தியத உயன, பனகொட இராணுவ முகாம் மற்றும் வெரஹேரா இராணுவ முகாம் ஆகியவற்றில் 20 முதல் 29 அகவைக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam