கொழும்பில் ஆடம்பர விருந்தகத்தில் இடம்பெற்ற திருமணம் - இராணுவத்தளபதி மறுப்பு
கோவிட் பரவலுக்கு மத்தியில் தனது மருமகளின் திருமணம் கொழும்பில் ஒரு முன்னணி ஆடம்பர விருந்தகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் செய்தியை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மறுத்துள்ளார்.
இது தமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பொய்யான பிரசாரத்தின் ஒரு பகுதியாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சவேந்திர சில்வாவின் மருமகளின் திருமணம் என்று கூறி பல இணையத்தளங்களில், புகைப்படங்கள் பகிரப்பட்டிருந்தன. சவேந்திர சில்வா மற்றொரு இராணுவ அதிகாரியை கட்டிப்பிடிப்பதைக் காட்டும் மற்றொரு புகைப்படமும் சமூக ஊடகங்களில் நேற்று வெளியாகியிருந்தது.
கோவிட் பரவல் காரணமாக நாட்டில் திருமண வைபவங்கள் இடை நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் அறிவித்திருந்த நிலையிலேயே இந்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தன .
எனினும் தனது இரண்டு மருமகள்களும் 16 மற்றும் 19 அகவைக்குட்பபட்டவர்கள் என்று
இராணுவத்தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இந்த செய்தி பிழையானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.