தேர்தலில் போட்டியிடுவது 75 வருட கால பிரச்சினைக்கான தீர்வை காணவே..! தமிழ் பொது வேட்பாளர் தெரிவிப்பு
நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது ரணில், அநுர, சஜித் போன்றவர்களின் ஆசனத்தை பெறுவதற்கல்ல, சமஷ்டி தீர்வு கோரியும் 75 வருட கால பிரச்சினைக்கான தீர்வுகளை முன்வைத்துமே என தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை - வெளிக்கடை தியாகிகள் கடற்கரைக்கு அருகில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
"நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது ரணில், அநுர, சஜித் போன்றவர்களின் ஆசனத்தை பெறுவதற்கல்ல சமஷ்டி தீர்வு கோரியும் 75 வருட கால பிரச்சினைக்கான தீர்வுகளை முன்வைத்துமே.
தமிழரசு கட்சியின் மாநாடு
திருகோணமலை மண்ணுக்கு பல வரலாறுகள் உள்ளன. இலங்கைக்கு சுதந்திர தினமன்று சிங்க கொடிக்கு பதிலாக கறுப்பு கொடி ஏற்றிய 22 வயது இளைஞன் நடராசா சுட்டுக்கொல்லப்பட்டார்.
1956இல் இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு தந்தை செல்வாவினால் இங்கு தான் நடாத்தப்பட்டது. அதன்போது, இணைந்த வடக்கு - கிழக்கின் தலைநகரமாக திருகோணமலையை அறிவித்திருந்தார். அப்போது கூட சமஷ்டியை வலியுறுத்தியே பேசியிருந்தார்.
1977இற்கு முன்பு பெரும்பான்மை இன நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கவில்லை. 1977இற்கு பின்பு சேருவில எனும் தொகுதியை உருவாக்கி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் லீலாரத்ன என்னும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
பொய் வதந்திகள்
2009 மே18இல் நடைபெற்ற போரின் போது நடந்த சம்பவம் பற்றி பல சர்வதேச நாடுகளுடனும் இந்தியாவுடனும் பேசியிருந்தோம். ஒன்றும் நடக்கவில்லை. இவ்வாறு ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தடுத்தவர்களே வெட்கமில்லாமல் வாக்கு கேட்கின்றார்கள் அதற்கு சில தமிழ் தேசியத்தில் உள்ளவர்களும் சோரம் போகின்றார்கள்.
அரியநேத்திரனுக்கு அளிக்க போகும் வாக்குகள் எனக்கல்ல. அவை உங்களுக்கானவை. ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலை எழுத்தை தீர்மானிக்கும். சங்கு சின்னத்துக்கு மாத்திரம் வாக்களியுங்கள் ஏனையவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.
இன்னும் சில நாட்களில் பொய் வதந்திகள் வரலாம் அதனை நம்பி ஏமாற வேண்டாம். செயற்கை நுண்ணறிவு மூலமாக எனது படத்தை பயன்படுத்தி போலியான பிரசாரங்களை முன்வைத்து செயற்படுவார்கள் எதையும் நம்ப வேண்டாம்" என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை சிறையில் மனிதாபிமானம் அற்ற ரீதியில் நடத்தப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் : முன்வைக்கப்பட்ட விமர்சனம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
