நபர் ஒருவரை மிக கொடூரமாக கொலை செய்த பெண்
பிபில நாகல பிரதேசத்தில் நபரொருவரை கத்தியால் வெட்டி, தீ வைத்து கொடூரமாக கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நடத்தும் கடைக்கு சென்ற நபரே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலை செய்த பெண்

குறித்த நபர் நாகல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான பெண்ணின் கடைக்கு நேற்று பிற்பகல் சென்ற போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த பெண்ணுக்கும் உயிரிழந்த நபருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோபமடைந்த பெண் பெரிய கத்தி ஒன்றால் அந்த நபரை கொடூரமாக வெட்டியுள்ளார். இதனையடுத்து கடையில் இருந்த பெட்ரோலை ஊற்றி அவரை தீயிட்டு எரித்துள்ளார்.
பொலிஸார் விசாரணை

சடலம் மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
வெங்கட் பிரபு படத்திற்காக சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா நடிகர் சிவகார்த்திகேயன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan