நபர் ஒருவரை மிக கொடூரமாக கொலை செய்த பெண்
பிபில நாகல பிரதேசத்தில் நபரொருவரை கத்தியால் வெட்டி, தீ வைத்து கொடூரமாக கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நடத்தும் கடைக்கு சென்ற நபரே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலை செய்த பெண்

குறித்த நபர் நாகல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான பெண்ணின் கடைக்கு நேற்று பிற்பகல் சென்ற போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த பெண்ணுக்கும் உயிரிழந்த நபருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோபமடைந்த பெண் பெரிய கத்தி ஒன்றால் அந்த நபரை கொடூரமாக வெட்டியுள்ளார். இதனையடுத்து கடையில் இருந்த பெட்ரோலை ஊற்றி அவரை தீயிட்டு எரித்துள்ளார்.
பொலிஸார் விசாரணை

சடலம் மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோபாயம் முன்னரங்கு 16 மணி நேரம் முன்
போதுமான உணவு, மருந்துகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்... பிரித்தானிய மக்களுக்கு ஆலோசனை News Lankasri
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam