விமர்சனங்களை மறைக்க முயற்சிக்கும் ராமநாதன் அர்ச்சுனா! பொய் பரப்புரை தொடர்பில் ஈ.பி.டி.பி வெளியிட்ட தகவல்
தனக்கு எதிரான விமர்சனங்களையும், குற்றங்களையும் மறைப்பதற்கும், தன்னை புனிதராக்குவதற்குமே நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா முயற்சிப்பதாகவும் அதன் ஒரு வெளிப்பாடே எம்மீதான குற்றச்சாட்டுக்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுடன் காணி முரண்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கும் ஈ.பி.டி.பி. க்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது.
யாழ். ஊடக மையத்தில் (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஈ. பி டி.பி. ஊடகச்செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மற்றும் மானிப்பாய் பிரதேச அமைப்பாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன் ஆகியோர் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளர். மேலும் தெரிவிக்கையில்,
ஈ.பி.டி.பி. க்கு எதிரான விமர்சனங்கள்
"தமக்கு எதிரான விமர்சனங்களை மறைப்பதற்கும், தங்களை புனிதர்களாக்குவதற்கும், தியாகிகளாக்குவதற்கும் யாரெல்லாம் விரும்புகின்றார்களோ, அவ்வாறானவர்கள் கையில் எடுக்கின்ற இலகு வழிமுறை தான், ஈ.பி.டி.பி. க்கு எதிரான விமர்சனங்கள். இதுவே நீண்ட வரலாறாக இருக்கின்றது.

அந்த அடிப்படையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அவர்களும், 2023 ஆம் ஆண்டு எமது செயலாளர் நாயகத்துடனான உரையாடலின் ஒரு பகுதியை வெளியிட்டிருந்தார்.
ஈ.பி.டி.பி. அதிகாரம்
உண்மையிலேயே குறித்த விடயம் தொடர்பாக அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம், பிரதேச அமைப்பாளர் ஊடாக விசாரித்து எமது கட்சி உறுப்பினர்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதுடன், சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே தனக்கு எதிரான விமர்சனங்களை மறைப்பதற்கு பழைய உரையாடலை வெளிப்படுத்தி தவறான கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
எவ்வாறாயினும், இராமநாதன் அர்ச்சுனாவின் கருத்துக்கள், ஈ.பி.டி.பி. அதிகாரத்தில் இருந்த காலங்களில் கூட அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது இல்லை. அப்பாவிகளை மிரட்டுவதற்கு ஆயுதங்களை பயன்படுத்தியது இல்லை என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது" என்றும் தெரிவித்துள்ளனர்.
2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அவதானம்..! அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri