சுகாதாரத்துறை தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனா

Colombo Jaffna Dr.Archuna Chavakachcheri
By Kajinthan Jul 14, 2024 12:26 AM GMT
Report

இலங்கையில் நடந்த இமினோ குளோபின் மற்றும் இதர பல கொள்ளை சம்பவங்களில் எங்களுடைய சுகாதாரத் துறை ஒருமுறை ஆட்டம் கண்டது என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

மேலும்,  ஒவ்வொரு தடவையும் நாம் முயற்சிக்கின்ற நேரங்களில் சுகாதாரத் துறையில் வைத்தியர்களுக்கான உரிமையை பெறுகின்றோம் என்ற அடிப்படையில் தொழிற்சங்கம் என்ற பெயர்களில் வைத்திய அதிகாரிகள் சங்கம் செய்கின்ற மக்கள் தொடர்பான அடாவடித்தனங்கள் ஒரு கட்டுக்கடங்காமல் போய் சுகாதாரத்துறை ஒரு மருத்துவ மாபியாக்களின் கூடாரமாக ஒரு தொழிற்சங்கங்களின் கூடாரமாக அழிந்து போனது வரலாறு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட நேற்று(13)முகநூல் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு விளக்கமளித்த அர்ச்சுனா

தொலைக்காட்சி நேர்காணல் தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு விளக்கமளித்த அர்ச்சுனா

உயிருக்கு அச்சுறுத்தல்

அதில் மேலும் அவர் குறிப்பிடுகையில், நேற்றைய தினம் என்னை சுகாதார அமைப்புக்கு அழைத்து முதல் மணித்தியாலத்தில் என்னிடம் சொல்லப்பட்டது, என்னுடைய வேலை இனிமேல் பரிபோகும் சாத்திய கூறு உண்டு.

அது தவிர என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு என்று மதிப்புக்குரிய சுகாதார செயலாளர் மற்றும் இதர பல உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் என்னை எனது மனவலிமையை பரிசோதித்துப் பார்த்தார்கள்.

ஆனால் மூன்றரை மணித்தியாலம் நீடித்த இந்த கூட்டம், கூட்டமென்று சொல்வதை விட நமது தலைவரை இந்தியா எவ்வாறு அழைத்து பேச்சு வார்த்தை என்ற பெயரில் ஒரு தனி அறையில் அடைத்தார்களோ அதே இதே போன்ற தொனியில் அதிகாரமாக என்னை மிரட்ட வைக்க முயன்றார்கள்.

சுகாதாரத்துறை தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனா | Archuna Blamed The Sri Lankan Health Department

ஆனால் அப்போது என்னால் சொல்லப்பட்ட விடயம் இந்த சந்திப்பு மற்றும் இதில் பேசப்பட்ட எந்த விடயங்களும் நான் பிழையான வழியில் பொதுவெளியில் பகிரப் போவதில்லை என்று.

ஆனால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி அதுமட்டுமன்றி எனது வேலை அடிப்படை உரிமை என்று தெரிந்தும் பொய்யான காரணங்களுக்காக தங்களால் என்னை அச்சுறுத்த முடியுமாயின் தாங்கள் அச்சுறுத்தி உள்ள விடயத்தை நான் பொது வெளிக்கு கொண்டு வருவேன் என்று கூறினேன்.

துணிவை எனது தந்தை 38 வருடங்களுக்கு முன்னமே சொல்லித் தந்து விட்டு தான் போயிருந்தார். எனது தந்தையின் வரலாற்றை கூட மிகத் தெளிவாக அவர்களிடம் நான் சொல்லி இருந்தேன்.

ஜனாதிபதி ரணிலுக்கும் வைத்தியர் அர்ச்சுனாவிற்கும் இடையே முக்கிய சந்திப்பு

ஜனாதிபதி ரணிலுக்கும் வைத்தியர் அர்ச்சுனாவிற்கும் இடையே முக்கிய சந்திப்பு

வைத்தியசாலைகளில் நடக்கும் கொடூரங்கள் 

இரண்டாவது மூன்றாவது மணித்தியாளங்கள் மிகவும் அன்பானவையாகவும் இரு மனங்களும் ஒத்து நடந்தது.

யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் வைத்தியர்களின் இடமாற்றம் சம்பந்தமான அடாவடித்தனங்கள் வைத்தியசாலைகளில் நடக்கும் கொடூரங்கள் பிணங்களை தின்று பணம் வேண்டும் சந்தர்ப்பங்கள் பாதிக்கப்பட்ட வைத்தியர்களுக்கோ தாதியர்களுக்கோ நோயாளர்களுக்கோ நீதி மறுக்கப்பட்ட தன்மையை நான் தெளிவாக அவர்களுக்கு அவர்களது மொழியிலேயே சொல்லிக் கொடுத்தேன்.

சுகாதாரத்துறை தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனா | Archuna Blamed The Sri Lankan Health Department

அதன்பின்பு தான் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தின் நிலைமை நன்றாக தெரிந்து கொண்டது. அது தவிர இந்த சுகாதாரத் துறைக்கான நூல் எழுச்சி போராட்டத்திற்கு முக்கியமாக வடக்கும் கிழக்கு மாகாணத்தில் இந்த சுகாதார தன்னிச்சையாக நடைபெறுவது என்பதையும் வைத்தியர் கேதீஸ்வரன் ஐயா மற்றும் சத்தியமூர்த்தி ஐயா அவர்கள் தன்னிச்சையாக பல பேருக்கு அநீதி விளைத்ததையும் அது தவிர வைத்தியர் மயூரன் போன்றோர்கள் அடித்தும் துவைத்தும் வைத்தியசாலையை நடத்துகின்ற தன்மையை நான் தெளிவாகச் சொல்லிக் கொண்டேன்.

இறுதியாக இந்த மாற்றத்தை பொதுமக்கள் வேண்டுகிறார்கள் அதில் எனது பங்கு என்ன இது அரசியலா இது அரசியலாக இவ்வாறு மாற்றப்படுகிறது இதன் பாதிப்புகள் பொதுமக்களை எவ்வாறு அடையும் என்ற எல்லா விதங்களையும் நான் அவர்களுக்கு தனியாக நின்று எடுத்துரைத்தேன்.

இந்த சுகாதார மாற்றத்துக்கு எனது வேலையோ உயிரோ போனாலும் நான் அடிபணிய போவதில்லை என்றதை அவர்கள் மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்டதுடன் இந்த மாற்றம் படிப்படியாக செய்ய வேண்டும் மாறாக உடனடியே செய்ய முடியாது என்பதை வைத்தியநாதன் மதிப்பிற்குரிய பாதித்த மகிபால அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

நடிகைக்காக பனை மரத்தில் ஏறிய தலைமுறை! சாவகச்சேரி விவகாரத்தை விமர்சித்த வைத்தியர்

நடிகைக்காக பனை மரத்தில் ஏறிய தலைமுறை! சாவகச்சேரி விவகாரத்தை விமர்சித்த வைத்தியர்

பொது மக்களின் சுகாதார உரிமை

ஆனாலும் நான் அவர்களிடம் பெற்ற வாக்குறுதி இந்த சந்தர்ப்பத்திலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்து சேவையில் நீடித்தால் குற்றங்கள் மறைக்கப்படும் என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் இன்று சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒரு பல்லை இழந்த பாம்பாக இன்னொரு பல்லுடன் சுகாதாரச் செயலாளரை சந்தித்து சுகாதார அமைச்சருக்கே ஒரு மிரட்டலை விடுத்திருக்கிறது என்பதை நான் பொது மக்களின் சுகாதார உரிமைக்கு எடுக்கப்படும் குந்தகமாகவே பார்க்கின்றேன்.

சுகாதாரத்துறை தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனா | Archuna Blamed The Sri Lankan Health Department

சுகாதாரத் துறையில் இருந்து அடாவடித்தனமான சுகாதார தொழிற்சங்க நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு மக்களுடைய சுகாதாரத் தேவை என்பது ஒரு அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட வேண்டும் என்பதை நான் எப்போதே முடிவெடுத்துக் கொண்டேன்.

அந்த மாற்றத்திற்கு சுகாதார அமைச்சர் இணங்கி கொண்டாலும் தங்களது பதவிகள் இதனால் பறிக்கப்படும் என்ற அச்சத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

ஆனால் வேலையையும் எனது உயிரையும் துச்சமாக நான் மதித்து இந்த சுகாதாரத் துறைக்கான ஒரு விடியலை நோக்கிய எமது மக்களின் பயணத்தை முஸ்லிம் தமிழ் சிங்களம் என்ற அடிப்படையில் பார்க்காமல் இனவாதம் பேசாமல் அரசியலாக்காமல் மிக ஆணித்தரமாக வைத்தியர்களுடைய நலனை முன்னிறுத்தி மேலும் வைத்தியர்கள் வெளிநாட்டில் இருந்து வந்து நிம்மதியாக வேலை செய்யக்கூடிய உறுதியான சுகாதார கட்டமைப்பை உடனடியாக நிறுவ வேண்டும் என்ற குறிக்கோளில் இந்தப் பாதையில் பயணிக்கின்றேன்.

யாராவது இந்த தமிழ் மொழிபெயர்ப்பை சிங்களத்தில் மொழிபெயர்த்து அதனை சிங்கள மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் ஆயின் எமது இலங்கையில் சுகாதாரத்துறை வைத்தியர்களுடைய நலன் தாதிகளின் நலன் பாதுகாக்கப்பட்டு அமெரிக்கா இங்கிலாந்து போன்ற தொழிற்சங்கங்கள் நிர்வாகிக்க முடியாத ஒரு சுகாதார கட்டமைப்பை நாங்கள் நிறுவுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணிலுக்கும் வைத்தியர் அர்ச்சுனாவிற்கும் இடையே முக்கிய சந்திப்பு

ஜனாதிபதி ரணிலுக்கும் வைத்தியர் அர்ச்சுனாவிற்கும் இடையே முக்கிய சந்திப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US