கடையடைப்பு போராட்டம் தொடர்பில் அர்ச்சுனாவின் விசேட தகவல்
கடந்த வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கில் நடத்தப்படவிருந்த கடையடைப்பு போராட்டம், இன்றையதினத்திற்கு(18) மாற்றப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள நேரலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மடு மாதா திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றதன் காரணமாக சுமந்திரன் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் திருவிழா
எனினும், இந்துக்களின் நல்லூர் திருவிழா இன்னும் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக கூறிய அர்ச்சுனா, தான் மதவாதம் பேசவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடையடைப்பு போராட்டம் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணித்தியாலங்களுக்கே நடைபெறும் என சுமந்திரன் கூறியிருந்தார்.
அந்த நேரத்தில் கடைகள் வழமையாகவே திறந்திருக்காது என அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடையடைப்பு போராட்டம் என்பது மக்களால் விருப்பப்பட்டு நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 8 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan