வடக்கு மாகாணத்தில் 350 ஆசிரியர்களுக்கு நியமனம்!
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள, டிப்ளோமாதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு வழங்கப்படவுள்ளன.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் உமாமகேஸ்வரன் ஊடகங்களுக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு
இதற்கமைய கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகள் 350 பேருக்கு மாகாணத்தில் வெற்றிடம் உள்ள பாடசாலைகளை முன்னுரிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸால், தேசிய கல்வியற் கல்லூரியில் வைத்து நியமன கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
மேலதிக விபரங்களை வடக்கு மாகாண சபையின் இணையத்தளம் www.np.gov.lk மற்றும் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் இணையத்தளம் www.cdumin.np.gov.lk ஆகியவற்றில் பார்வையிட முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri

பெண் ஒரு மென்மையான மலர்; இந்தியாவை பற்றி தெரியாது - போர் சூழலில் வைரலாகும் காமேனியின் பதிவுகள் News Lankasri
