ஜனாதிபதி செயலணிக்கு தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் நியமனம்! - விசேட வர்த்தமானி வெளியானது
கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணிக்கு புதிய உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறித்த மூன்று உறுப்பினர்களும் மூவினத்தை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில அளவையாளர் ஆரியரத்ன திசாநாயக்க, ஓய்வுபெற்ற மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், விரிவுரையாளா் முபிசால் அபூபக்கா் ஆகியோர் இந்த ஜனாதிபதி செயலணியின் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஜனாதிபதி செயலணி கடந்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. செயலணியின் உறுப்பினர் கட்டமைப்பை விரிவாக்கும் நடவடிக்கைகளுக்கமைய இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, செயலணியின் உறுப்பினராக கடமையாற்றி வரும் நில அளவையாளா் நாயகம் எம்.எஸ்.பீ. தென்னக்கோன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.







6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
