ஆளுநர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கு பாராட்டு! சி.வி.கே.சிவஞானம்
அண்மையில் நியமிக்கப்பட்ட மூன்று ஆளுநர்கள் நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கு உண்மையிலேயே பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது வடமாகாண சபை அவைத்தலைவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
ஆளுநர்கள் நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கு உண்மையிலேயே பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். பதவி நீக்கப்பட்ட மூன்று ஆளுநர்களுக்குமே மாகாணம் தொடர்பான அடிப்படை அறிவே கிடையாது.
அரசியல் ரீதியிலான ஆளுநர் மாற்றம்
அண்மையில் நீக்கப்பட்ட மூன்று ஆளுநர்களுமே எதேச்சதிகாரமாக செயற்பட்டதுடன் மாகாணம் தொடர்பான அடிப்படை அறிவே கிடையாது. ஆனால் ஆளுநராக நியமிக்கப்பட்ட மூவருமே மாகாண நிர்வாகத்துடன் ஏதோவொரு வகையில் தொடர்புபட்டு செயல்பட்டவர்கள்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மத்திய மாகாண சபையிலே உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்து செயற்பட்டவர். வடமேல் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தென்மாகாண சபை உறுப்பினராக இருந்து செய்யப்பட்டவர். வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஏற்கனவே வடக்கு மாகாணத்தில் ஆளுநராக இருந்ததுடன், நிர்வாக ரீதியான விடயங்களிலும் அனுபமிக்கவர்.
அரசியல் ரீதியிலான காரணங்களுக்காக ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டாலும் கூட இவ்வாறான அனுபவங்கள் கொண்டவர்களை நியமிக்கும் போது அதனை சிறப்பாக செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
