உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! - விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நியமிப்பு
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய 25 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்ய, பிரதம நீதியரசரால் விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி தமித் தொடவத்த தலைமையிலான இந்த குழாத்தில் நீதிபதிகள் அமல் ரணராஜ மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத்தாக்குதல்கள் குறித்த விசாரணையின்போது வெளிவந்த தகவல்கள் தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்டவர்களுக்கு தெளிவுபடுத்தத் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதற்கான சந்திப்பொன்றை எதிர்வரும் சில தினங்களில் ஏற்பாடு செய்வதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாப்பரசரின் வத்திக்கான் தூதுவர் பேராயர் பிரையன் உடேக்வே, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை வெளிவிவகார அமைச்சில் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இதன்போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறித்த விடயம் தொடர்பில் உறுதியளித்துள்ளார்.

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
