ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, அதன் தலைவராக நீதிபதி டபிள்யூ. எம். என். பி. இத்தவல நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய உறுப்பினர்களாக சேத்திய குணசேகர மற்றும் பேர்னாட் ராஜபக்ஷ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 41B மற்றும் 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 04 இன் படி 2024 ஜனவரி 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் உறுதிப்பாடு
வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் அரச சேவையின் அனைத்து மட்டங்களிலும் ஊழலை தடுப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறது.
அரச சேவையின் தார்மீக விழுமியங்கள் மற்றும் நல்இருப்பை பாதுகாத்து, அனைத்து வகையான ஊழல்களையும் தடுப்பதற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தமது நீண்டகால அனுபவத்தைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊழலுக்கு எதிராக போராடும் இலங்கையின் பொறுப்புக்கூறலை, உறுதி செய்யும் முன்னணி நிறுவனமாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு செயற்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |