பதவி விலகவுள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர்

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Court of Appeal of Sri Lanka
By Amal Jan 12, 2025 12:36 AM GMT
Report

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன தனது பதவியில் இருந்து விலக உள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவருக்கு எதிராக ஒரு பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நீதியரசர் கருணாரத்ன இந்த மாத இறுதியில் தனது பதவி விலகலை சமர்ப்பிக்க உள்ளதாக அறியப்படுகிறது.

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறீதரன்: வன்மையாக கண்டித்த தமிழரசு கட்சி

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறீதரன்: வன்மையாக கண்டித்த தமிழரசு கட்சி

மேலதிக விசாரணைகள்

முன்னதாக, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதான 63 வயதை எட்டியவுடன் இந்த ஆண்டு ஜூன் 16ஆம் திகதி அவர் ஓய்வு பெறவிருந்தார்.

இதேவேளை, கருணாரத்னவின் அண்மைய செயல்களை மேற்கோள் காட்டி அவருக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இடையே நடந்த கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, நிலுவையில் உள்ள 11 கடுமையான குற்றவியல் வழக்குகளை' விரைவுபடுத்த சட்டமா அதிபர் திணைக்களம் முடிவெடுத்துள்ள நிலையிலேயே இந்த குற்றப்பிரேரணை தீர்மானமும் வந்துள்ளது.

பதவி விலகவுள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் | Appeal Court President To Resign

இந்தநிலையில், நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளை மேலதிக விசாரணைகளுக்காக மீண்டும் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு சட்டமா அதிபர் ரணசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பதால், மூன்று வழக்குகள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள நான்கு வழக்குகளில் சந்தேக நபர்களுக்கு எதிராக வரும் வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளன.

அரசியலமைப்பு பேரவை

சில குற்றங்கள் வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ளதாகத் தோன்றுவதால், விசாரணைகளை நடத்துவதற்கு சட்ட உதவி வழங்க சம்பந்தப்பட்ட நாடுகளிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளை முடித்து சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பரஸ்பர சட்ட உதவிச் சட்டங்களின் கீழ் இந்த நாடுகளிடமிருந்து உதவி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் செய்தியாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு, மூன்று கடற்படை உறுப்பினர்களை கைது செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தல்களை பிறப்பித்துள்ளமை தெரியவந்துள்ளது.

பதவி விலகவுள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் | Appeal Court President To Resign

இருப்பினும், அந்த அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படவில்லை. அதற்கு பதிலாக, விசாரணை கோப்பு வேறொரு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்திற்கு நான்கு நீதியரசர்களை நியமிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் செய்யப்பட்ட பரிந்துரைகளை அரசியலமைப்பு பேரவை அங்கீகரித்துள்ளது.

அதன்படி, சோபித ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் அபயகோன் மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் இன்று(12) உயர் நீதிமன்ற நீதியரசர்களாக பதவியேற்க உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சிப் பதவியில் இருந்து விலகும் எரான் விக்ரமரத்ன

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சிப் பதவியில் இருந்து விலகும் எரான் விக்ரமரத்ன

உள்ளூராட்சித் தேர்தலிலாவது தமிழர்கள் ஒன்றுபடுவார்களா...!

உள்ளூராட்சித் தேர்தலிலாவது தமிழர்கள் ஒன்றுபடுவார்களா...!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US