அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்
முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் (Appapillai Amirthalingam) 35ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் (13) அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வினை, பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் அண்ணா கலைமன்றம் ஆகியன இணைந்து வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள அமிர்தலிங்கத்தின் திருவுருவ சிலையின் முன்றலில் நடத்தியுள்ளன.
கலந்து கொண்டோர்
இந்நிகழ்வின் போது, ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் திருவுருவசிலைக்கு மலர்மாலையும் அணிவிக்கப்பட்டது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை தலைவர் ஈஸ்வரபாதம் சரவணபவன், யசோதா சரவணபவன், வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நாகரஞ்சினி ஐங்கரன் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான ஜெயந்தன் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam