புத்தாண்டில் உறுதியான மாற்றத்தை காட்ட வேண்டும்- அனுராதா யஹம்பத்(Photos)
புத்தாண்டில் பணியைத் தொடங்கும் போது, செலவுகளைக் குறைத்து, உறுதியான மாற்றத்தைக் காட்டுமாறு கிழக்கு ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (18.04.2023) முன்னெடுக்கப்பட்ட புத்தாண்டு பணிகளில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளை போக்க நேரடி பங்களிப்பை வழங்கும் நோக்கில் செலவுக் கட்டுப்பாடு குறித்து வலியுறுத்தியதுடன் அதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.
செலவுகளை கட்டுப்படுத்துவதில் அனைவரும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆளுநர் இதன்போது கேட்டுக்கொண்டார்.
கிழக்கு மாகாணமே வெற்றியை பெற்றது
மாகாணத்தில் பிரச்சினைகள் எழுந்தபோது நாம் அனைவரும் ஒன்றிணைந்து அவற்றை எதிர்கொண்டோம். நாட்டிலுள்ள ஏனைய மாகாணங்களை விட எமது மாகாணத்தின் அதிகாரிகள் எப்பொழுதும் சகல பொறுப்புக்களையும் ஒன்றிணைந்து ஏற்றுக்கொண்டோம்.இதனால் மாகாணம் அந்த வெற்றியைப் பெற்றது.
அதுமட்டுமல்ல, நம்முடைய மாகாணத்திற்கு வரும் வெளிநாட்டு தூதுவர்கள் கூட எமது மாகாணத்தின் வேலைத்திட்டத்தை பாராட்டுகின்றனர். அவர்கள் அந்த செய்தியை தங்கள் நாடுகளுக்கும் அனுப்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
இதன்போது, ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் சலுகா தினேந்திரா, ஊடக செயலாளர் ருசிர திலான் மதுசங்க, இணைப்பாளர்களான மகேஷ் சதுரங்க, சிந்தக விஜேவர்தன, மக்கள் தொடர்பு அதிகாரி பிரபாஷிகா விஜேசேகர, ஆளுநரின் உதவி செயலாளர்ஏ.ஜி.தேவேந்திரன், கணக்காளர் பி.கோணேஷ், நிர்வாக அலுவலர் கே.சுதாகரன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகை ரேவதி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?... லேட்டஸ்ட் போட்டோ Cineulagam

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு News Lankasri
