அநுரகுமாரவா விஜேவீரவா துரோகி! ராஜித கேள்வி
ஜே.வி.பி.யின் தற்போதைய தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவா அல்லது ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீரவா துரோகி என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
இந்த இருவரில் ஒருவர் துரோகியாகும் என அவர் இணைய ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க நேர்மையானவர் என்றால் விஜேவீர பெரிய பெய்யராகவோ அல்லது துரோகியாகவோ இருக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு முழுவதும் போராட்டங்கள்
ஜே.வி.பியின் ஸ்தாபகத் தலைவர் ரொஹன விஜேவீர, இந்திய விரிவாக்கக் கொள்கை, 13ம் திருத்தச் சட்டம் மற்றும் மாகாணசபை முறைமை என்பனவற்றை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்களை நடத்திவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க, திருகோணமலை எண்ணெய் குதம், சம்பூர் மின் திட்டம் போன்றவற்றை இந்தியாவிற்கு வழங்குகின்றார்.
இந்த இரண்டு பேரில் ஒருவர் மட்டுமே நேர்மையானவராக இருக்க வேண்டுமென ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
