அமெரிக்காவிடம் இலங்கை ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அண்மையில் விதிக்கப்பட்ட இறக்குமதி வரிகள் தொடர்பில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதம் கிடைத்ததை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
வரி குறைப்பு
வரியினால் ஏற்பட கூடிய தாக்கத்தை குறைப்பதற்கு இலங்கை எடுக்கக்கூடிய சாத்தியமான வழிகளை ஜனாதிபதி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தீர்வை வரியை குறைப்பதற்கு ஒத்துழைப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி கடிதத்தில் கோரியதாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan